தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என்ற பெயரை பெற்றவர் ஆண்ட்ரியா . வட சென்னை படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட்டாகமல் இருந்த ஆண்ட்ரியா, சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற கவிதை போட்டியில் கலந்துகொண்டார்

புரோக்கன் விங்ஸ் என்ற தலைப்பில் தனது வாழ்க்கையில் சந்தித்த துயரத்தை பகிர்ந்து கொண்டார். திருமணமான ஒரு நபருடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும் அந்த நபர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறினார். அந்த நபரை பற்றிய விவரங்களை தன்னுடைய புரோக்கன் விங் புத்தகத்தில் தெரிவித்திருப்பதாக கூறினார்.

அந்த புத்தகத்தை வெளியிட போவதாக அறிவித்தாரே ஒழிய வெளியான பாடில்லை . சம்பந்தப்பட்ட அந்த நபரிடமிருந்து கொலை மிரட்டல் வரும் காரணமாக புத்தகத்தை வெளியிட முடியாமல் திணறி வருகிறார்.என கூறப்படுகிறது .