பீஜிங்

சீன நாட்டில் கொரோனா வைரஸால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 717 ஆகி உள்ளது

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாநிலத்தில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.   அந்த வைரஸ் பாதிப்பு அந்நாடு முழுவதும் பரவி உள்ளது.  சீனாவில் வைரஸ் தாக்குதலால் மரணம் அடைவோர் எண்ணிக்கையும் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்து வருகிறது.

சீன மருத்துவமனைகளில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்க போதுமான வசதி இல்லாததால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.   இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கத் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க உலகின் பல நாடுகளும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.

சீன அரசின் அறிவிப்பின்படி அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 717 ஆகி உள்ளது.  அத்துடன் 34000க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.