தேனி:

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள  குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 2 பேர் மரணம் அடைந்ததை தொடர்ந்து, மரணமடைந்த வர்களின்  எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சையை சேர்ந்த எம்சிஏ பட்டதாரியான 26 வயது சாய் வசுமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று காலை உயிரிழந்த நிலையில், மதுரை தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக குரங்கணி காட்டுத்தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.