கவுகாத்தி:

அசாம் மாநிலம் கோலாகட்
டில்  கள்ளச் சாராயம் குடித்து இறந்தோரின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.


அசாம் மாநிலத்தில் கோலாகட் என்ற இடத்தில் கடந்த வியாழக்கிழமை ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்தனர்.

சில நிமிடங்களிலேயே ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 27 பேர் அருகில் உள்ள ஜோராட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 22- ஆக உயர்ந்தது. இதில் பெரும்பாலோர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.

கள்ளச்சாராய சம்பவத்துக்கு கோலாகட் எம்எல்ஏ மிரினால் சைக்கியா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.