இன்று முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நினைவு நாள்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனக்கும் அப்போதைய பிரதமர் நரசிம்மராவுக்கும் இடையே தலைமுறை இடைவெளி இருப்பதாக பேசி சலசலப்பை ஏற்படுத்தியும், அது குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனமாகவே தனது ஆட்சி காலத்தை சிறப்பாக நடத்திய காங்கிரஸ் தலைவர்.

நேரு மற்றும் காந்தி வம்சாவழியில் வராமல், முழு ஐந்து ஆண்டுகள் பதவியில் சிறப்பாக சேவை செய்த இந்தியாவின் முதல் பிரதம மந்திரி நினைவுக் கூறப்பட்டவர் பி.வி. நரசிம்ம ராவ்.

தென்னிந்தியாவை சேர்ந்த ஒருவர் பிரதமராக முழு கால ஆட்சி செய்து, நாட்டை ஆண்ட முதல் அரசியல்வாதி ஆவார். 5 லட்சம் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வென்று, அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சாதனைப் படைத்தவர், நரசிம்ம ராவ்.

நாட்டின் புதிய  பொருளாதார மாற்றம் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு பாதிக்கும் பல சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது ஆட்சியின் போது நாட்டின் நலனுக்காக பல்வேறு சேவைகள் செய்து சாதனைகள் நிகழ்த்தினார்.

அவரை “இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை” என்றும் தொழில், பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்டத்தில் அவரது சிறப்பான மற்றும் தனிதத்துவமான பங்களிப்பைக் கண்ட சில மக்கள் அவரை “சாணக்யர்” என்றும் அழைத்தனர்.

எனினும், ‘ஒவ்வொரு நாணயத்திலும் இரண்டு பக்கங்கள் உண்டு’ என்பதைக் குறிக்கும் விதமாக நரசிம்ம ராவ் அவர்கள், பிரதம மந்திரியாக இருந்த போது, அயோத்தியில் பாபர் மசூதி தகர்ப்பு கண்ட நிகழ்வு, இந்திய தேசிய வரலாற்றில் ஒரு பரபரப்பூட்டும் நிகழ்ச்சியாக இருந்தது. இது தவிர, அவரது ஆட்சிக் காலத்தில், அவர் பல ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டிருந்தார் என்று பல பேச்சுகளும் இருந்தது. அரசியலில் சாணக்யர் என்று போற்றப்பட்டவர்  பி.வி. நரசிம்ம ராவ்.

1921ம் ஆண்டுஜூன் 28ந்தேதி ஆந்திராவில்  பிறந்த நரசிம்மராவ், வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர். காங்கிரஸ் மீதுள்ள தீவிர ஈடுபாடு காரணமாக அரசியலில் குதிதார்.

அரசியல் வாழ்க்கை

 

நரசிம்ம ராவ் அவர்கள், இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, ஒரு சுதந்திர போராட்ட வீரராகத் தீவிரமாகப் பணியாற்றினார். மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், உடனடியாக அரசியலில் தன்னை முழுநேர ஊழியராக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி, ஹைதெராபாத் மாநில முதலமைச்சராக இருந்த பர்குலா ராமகிருஷ்ணா ராவைப் பின்பற்றி, அவர் வழியில் பணியாற்றினார். 1951ல், அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) உறுப்பினரானார்.

அதன் பின்னர், 1957ல் மாநில சட்டமன்றத்தின் உறுப்பினரானார். அவர் சட்டம் மற்றும் தகவல் அமைச்சராக 1962 முதல் 1964 வரையிலும், சட்டம் மற்றும் அறக்கட்டளை அமைச்சராக 1964 முதல் 1967 வரையிலும், உடல்நலம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சராக 1967லும், மற்றும் ஆந்திர பிரதேச அரசு கீழ் கல்வி அமைச்சராக 1968 முதல் 1971 வரையிலும், பல முக்கிய அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார்.

ஆந்திர பிரதேச அரசின் கீழ்  பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்த பிறகு, 1971 ஆம் ஆண்டு நரசிம்மராவ் அவர்கள், ஆந்திர பிரதேச முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பிராமணர்  தேர்தலில் வென்று, முதலமைச்சர் பதவியேற்றதைக் கண்டு பலரும் வியந்தனர்.

1969ல் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுற்ற போது, நரசிம்மராவ் அவர்கள், இந்திரா காந்திக்கு ஆதரவு தெரிவித்து, அவரது மரணம் வரை அவருக்கு விசுவாசமாக இருந்தார். நரசிம்ம ராவ் அவர்கள், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அவர்களின் அமைச்சரவைகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியதால், 1985ல் இந்தியா முழுவதும் பெரும் புகழ் பெற்றார். அவர் 1980 முதல் 1984 வரை, வெளியுறவு அமைச்சராகவும், 1984ல் உள்துறை அமைச்சராகவும், 1984 முதல் 1985 வரை பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அதன் பிறகு, அவர் 1985 ஆம் ஆண்டில்,  மனித வள மேம்பாட்டு அமைச்சராகவும் பதவியேற்றார்.

நரசிம்மராவின்  சாதனைகள்

தேசிய அணு பாதுகாப்பு மற்றும் ஏவுகணைகள் திட்டத்தில் நரசிம்ம ராவ் அவர்கள், எடுத்த முயற்சியே 1998ல், இந்தியா வெற்றிகரமாக பொக்ரான் அணு சோதனைகள் மேற்கொள்ள காரணமாக அமைந்தது.

இந்த சோதனைகள் அனைத்தும் ராவின்  பதவிக்காலத்தின் போது துவங்கப்பட்டாலும், அமெரிக்க உளவுத்துறை இதனை அறிந்ததும், அமெரிக்காவின் நெருக்கடியின் காரணமாக தவிர்க்கப்பட்டது.

மேலும், அந்த நேரத்தில் வெப்பாற்றல் சாதனத்தை உருவாக்கவும், சோதிக்கவும் அதிக நேரம் தேவைப்படும் என்ற தகவலை நரசிம்ம ராவ் அவர்களே வெளியில் சொன்னார் என்றும் பல ஊடகங்கள் அவரைக் குற்றஞ்சாட்டியது. அவர் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளை எதிர்க்கும் விதமாக, இராணுவப் பயிற்சி மற்றும் அதற்காக வழங்கப்படும் கல்வித் தொகையை அதிகரித்தார்.

அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை இயக்கியதோடு மட்டுமல்லாமல், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹஸ்ரத்பல் புனித ஸ்தலத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றியதற்கு, இந்தியாவின் சார்பிலிருந்து பதிலடியும் கொடுத்தார். ராவ், மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளோடு இந்தியாவை பல ஒப்பந்தங்கள் மூலமாக இணைத்தார்.

1992 வரை, இஸ்ரேலுடனான இரகசிய உறவைக் கூட அவர் பகிரங்கப்படுத்தினார். இதன் விளைவாக, இஸ்ரேல் புது தில்லியில் ஒரு தூதரகம் திறக்க அனுமதியும் வழங்கினார்.

மார்ச் 12, 1993 மும்பை குண்டுவெடிப்புக்குப் பின்னர், நாட்டில் நிலவிய மேலாண்மையின் நெருக்கடியை சமாளிக்க, அவர் எடுத்த அற்புத நடவடிக்கைகளுக்காக அவர் பெரிதும் பாராட்டப்பெற்றார். அவர் தனிப்பட்ட முறையில் பம்பாய் சென்று, குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தானின் உண்மைகளையும், தலையீட்டையும் கண்டுபிடிக்கும் நோக்கமாக அமெரிக்க, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய மேற்கு நாடுகளிலிருந்து அவர்களது உளவுத்துறை அதிகாரிகளை இந்தியா அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

1996ல், நரசிம்ம ராவ் அவர்கள், இந்திய பிரதமராக ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்த பின்னர், பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமாக தோற்கடிக்கப்பட்டது.

செப்டம்பர் 1996 வரை அவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றினார், பின்னர் அவருக்கு பதிலாக சீதாராம் கேசரி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவரது கட்சித் தலைமையின் கீழ், ஒரு சர்வாதிகார நிலைப்பாட்டையும், உறுப்பினர்களையும் செம்மையாக வழிநடத்தினார்.

இதுவே பல்வேறு முக்கிய மற்றும் மிகவும் பிரபலமான காங்கிரஸ் தலைவர்களான, நாராயண் தத் திவாரி, அர்ஜூன் சிங், மாதவராவ் சிந்தியா, மமதா பானர்ஜி, ஜி.கே.மூப்பனார், மற்றும் ப.சிதம்பரம் போன்றோரை வெளிக்கொண்டு வந்தது. அரசியலில் ஒரு பிரபலமானவராக இருந்தாலும், நிதி நெருக்கடியில் இருந்த போது, அவர் மகனின் கல்விக்காக, அவரது ஒரு மருமகன் தான் உதவி செய்தார்.

தனது மகள் மருத்துவம் பயில செய்வதற்கும், அவர் கடினமான நிதிப் பிரச்சனைகளில் இருந்தார் என்று கண்டறியப்பட்டது. நரசிம்ம ராவின் ஊடக ஆலோசகராகவும், ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகவும் இருந்த பிவிஆர்கே. பிரசாத்தின் அறிவுரைப்படி, அவருக்கு சொந்தமான பஞ்சாரா ஹில்ஸ் சொத்தை விற்று, பரிந்துரைப்பவர்களின் கட்டணத்தை செலுத்தினார்.

நரசிம்ம ராவ் அவர்கள், டிசம்பர் 9, 2004 ஆம் ஆண்டு மாரடைப்பால் அவதிப்பட்டதால்,   அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். பதினான்கு நாட்கள் மருத்துவமனையில் போராடிய அவர், டிசம்பர் 23 ஆம் தேதி அன்று தனது கடைசி மூச்சை விட்டார்.

அவரது உடலை புது டில்லியில் தகனம் செய்ய அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தாலும், காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் நுழைய மறுக்கப்பட்டதால், அவரது உடல்  ஐதராபாத் எடுத்து செல்லப்பட்டு, அங்கு ஜூப்ளி மண்டபத்தில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

அவரது இறுதிச்சடங்கில் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவே கவுடா, பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.கே. அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சர், பி சிதம்பரம் போன்ற பல பிரபலங்களும், பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அப்போதைய ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஒய்எஸ். ராஜசேகர் ரெட்டி தலைமையில், அவரது உடல் முழு மரியாதையோடு தகனம் செய்யப்பட்டது.

2004ம் ஆண்டு டிசம்பர் 23ந்தேதி அன்று தனது  83வது வயதில், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மாரடைப்பால் மரணமடைந்தார்.