தமிழகத்தில் வரும் 28,29ம் தேதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா கூறுகையில்,
வங்க கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் 28, 29ம் தேதிகளில் மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை முடியும் நேரமாக இருப்பதால் பெரிய அளவு மழை இருக்காது என்றார்.