சென்னை:

ரசியல் கட்சி தொடங்கப்போவதாக தெரிவித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சரியாக 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பை நடத்தினார்.

அப்போது,  என்னுடைய வருங்கால அரசியல்எப்படி இருக்கும், என்பதும், நான்அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்ட மக்களுக்கும் தெளிவு வரும் வகையிலேயே இந்த சந்திப்பு என்று தெரிவித்தார்.

1996ம்ஆண்டு முதல் ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறி வருகின்றனர்.. ஆனால், முதன்முதலாக அரசியலுக்கு வருவதாக அறிவித்தது 2017ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதிதான் என்று ஆணித்தரமாக கூறினார்…

அதற்கு முன்பு தன்னிடம் கேள்விகள் கேட்கப்படும்போதெல்லாம்.. அரசியலுக்கு வரப்போவதாக கூறவில்லை என்றும், அதற்கான நேரம் வரும்போது தெரிவித்ததாகவே கூறினார்.