சிட்னி: சிஎஸ்கே அணியிலிருந்து ஜோஷ் ஹேசில்வுட் விலகியது அணியை பாதிக்காது என்றும், அவரின் இடத்தை லுங்கி நிகிடி திறமையாக ஈடுசெய்வார் என்றும் கருத்து கூறியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஹேசில்வுட், 14வது ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகினார். சிறந்த பந்துவீச்சாளரான அவர் விலகியது, சென்னை அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பிராட் ஹாக் கூறியுள்ளதாவது, “ஒரு வீரரை மட்டும் நம்பி அணி இல்லை. சிஎஸ்கே அணியின் பெளலிங் ஆர்டர் சிறப்பாகவே உள்ளது. ஹேசில்வுட்டின் இடத்தை நிகிடி சிறப்பாகவே ஈடுசெய்வார்.

அதேசமயம், தேவையென்றால், ஹேசில்வுட்டிற்கு பதிலாக புதிய வீரரை தேர்வுசெய்வது குறித்தும் முடிவெடுக்கப்படும். அதேசமயம், அதுகுறித்து இப்போதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார் அவர்.