புது டெல்லி:
ள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ல் முடிவு செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதால் அறிவிக்கப்பட்ட 21 நாள் முழுஅடைப்பு பகுதியளவு நிறைவடைந்துள்ள நிலையில்., மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால், ஏப்ரல் 14-க்கு அப்பால் பணிநிறுத்தம் நீட்டிக்கப்பட்டால், மாணவர்கள் கல்வி ரீதியாக எந்த இழப்பையும் சந்திக்காமல் இருக்க அமைச்சகம் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு அரசுக்கு மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால், மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் எந்த இழப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ஆம் தேதி முடிவு செய்யப்படும். மாணவர்களுக்கு நடத்தப்படமால் விடுப்பட்ட தேர்வுகள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, இன்று நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 3,374-ஆக உயர்ந்தது. இறப்புகளின் எண்ணிக்கை 77-ஆக அதிகரித்துள்ளது. மேலும், செயலில் உள்ள கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 3,030-ஆக உள்ளது. மற்றும் 266 பேர் இதுவரை சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சரின் இன்றைய அறிவிப்பு, ஏப்ரல் 14-க்கு பிறகவும் முழு அடைப்பு நீட்டிக்கப்படலாம் என்ற யூகங்களுக்கு வழிவகுக்கிறது எனலாம். முன்னதாக, உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் வரும் ஏப்ரல் 30 வரை முழு அடைப்பு நீட்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.