சென்னை,

மெர்சல் படத்தில் வரும் ஜி.எஸ்.டி., மற்றும் பண மதிப்பிழப்பு குறித்த காட்சிகளை ஆளும் பாஜகவினர் கடுமையாக எதிர்த்து வந்தனர். இக் காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், அந்தக் காட்சிகளை நீக்க இருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு தயாரிப்பாளர் முரளி ராமசாமி தெரிவித்துள்ளார்.