அர்ஜெண்டினா நாட்டு கால்பந்து வீரரான மரடோனா, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர்.

60 வயதான மரடோனாவுக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு அண்மையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

பூரண குணம் அடைந்து பியூனஸ் ஏர்சில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய அவர் மாரடைப்பால் கடந்த 25 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் மரடோனா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.

மரடோனாவின் பிள்ளைகளும் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
“அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்” எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் மரடோனா சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலும், அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் லியோ போல்டு இல்லத்திலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

ஆனால் மரடோனா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறப்படுவதை டாக்டர் லியோ மறுத்துள்ளனர்.

“மரடோனா இறப்பில் மர்மம் ஏதும் இல்லை. இது தொடர்பான விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி