டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கெஜ்ரிவால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ளது. இதனால், இன்றுமுதல் 6 நாட்கள் முழு டாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு எடுக்கப்பட்ட சோதனையில், கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது- இதையடுத்து, தான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.