டெல்லி: டெல்லியில் 160 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 1 கிலோவை மட்டுமே கணக்கு காட்டி, மற்றவறை விற்றுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜஹாங்கிர்நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இரண்டு தலைமை கான்ஸ்டபிள்கள் உட்பட 4 போலீசார் செப்டம்பர் 11 ம் தேதி 160 கிலோ கஞ்சாவை ரெய்டின் போது பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் அவரிடம் இருந்து ரூ.1.5 லட்சத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு 160 கிலோ கஞ்சாவுக்கு பதிலாக, ஒரு கிலோவை மட்டுமே பிடித்ததாக கணக்கு காட்டி உள்ளனர். இந்த விவரம் வெளியாக, 4 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

கஞ்சா மற்றும் போதை பொருள்களை இந்திய சினிமா பிரபலங்கள் பயன்படுத்துவதாக விவாதமும், விசாரணையும் நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.