டெல்லி: தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,509 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் குறைந்து கொண்டே வருவதாக பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று மட்டும் 2,509 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.டெல்லியில் 2ம்  நாளாக 2000ஐ கடந்துள்ளது.

ஒட்டு மொத்தமாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,79,569 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 19 பேர் இன்று மட்டும் பலியாகி உள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,481 ஆக உயர்ந்து இருக்கிறது.

ஒரு நாளில் 1,858 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 1,58,586 ஆக அதிகரித்து உள்ளது. அதுமட்டுமின்றி 16,502 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.