டெல்லி: 7 முதல் 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரும் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று  தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கொரோனா 3வது அலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந் நிலையில், முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது கவலை தருகிறது. அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் பாதிப்பு கட்டுக்குள் வரும்.

கொரோனா பாதிப்பு அதிகரிக்க காற்று மாசு மிகப்பெரிய காரணம். காற்று மாசு அதிகரித்த பிறகே, டெல்லியில் பாதிப்பு உயரத் தொடங்கியது என்று தெரிவித்து உள்ளார்.