டெல்லி:  தலைநகர் டெல்லி மாநில  சுற்றுசூழல் நலத்துறை அமைச்சர் கோபால்ராய்க்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் தன்னுடன் தொடர்பில் உள்ளவர்கள் சோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில், பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் காரணமாக, தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கொரோனா  தொற்றின் 2வது அலை வீசத்தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி மாநில சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் கோபால் ராய்க்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது  தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  தனக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் தான் பரிசோதனை செய்து கொண்டதாகவும் அதில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால்,  தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். தன்னுடன்  தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.