டெல்லி:

கொரோனா பாதிப்பால் அபாயக்கட்டத்தை அடைந்தடெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கடந்த இரு நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி  ராஜீவ் காந்தி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தநிலையில்,  அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டது. இதற்கிடையே அவருக்கு நிமோனியா காய்சல் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துமு

இதையடுத்து, அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. உடடினயாக  அவரை டெல்லி சாகேத்தில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர்.  அங்கு அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு காய்ச்சல் குறைந்துள்ளது, அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்று  மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.