அபுதாபி: ஐதராபாத் அணிக்கெதிராக நடைபெறும் இறுதி பிளே ஆஃப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப்போட்டியில், மும்பையுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி பிளே ஆஃப் போட்டி அபுதாபி மைதானத்தில் தற்போது துவங்கியுள்ளது.

இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது. துவக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கியுள்ளனர்.

இத்தொடரில், இதுவரை 2 சதங்கள் அடித்துள்ள ஷிகர் தவான், அதற்கடுத்து பல போட்டிகளில் சொதப்பி வருகிறார். எனவே, இன்றையப் போட்டியில் அவர் சாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், டெல்லி அணியைவிட, ஐதராபாத் அணி எழுச்சிபெற்று திகழ்கிறது. இறுதிப் போட்டிக்கு தகுதிபெறக்கூடிய போட்டி என்பதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.