மும்பை: 14வது ஐபிஎல் சீஸனில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் இறங்கியுள்ளது தோனியின் சென்னை அணி. இந்தப் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து, சென்னை அணியில் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் & டூ பிளசிஸ் களம் கண்டுள்ளனர்.

சென்னை அணியில், இவர்கள் இருவர் தவிர, சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, எம்எஸ்.தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், பிராவோ, ஷர்துல் தாகுர், தீபக் சஹார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த தொடரில், மோசமாக செயல்பட்ட சென்னை அணி, இந்த தொடரை, வெற்றியுடன் துவக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.