டில்லி:

ரட்டை இலை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு  லஞ்சம் கொடுக்க முயன்றதாக உள்ள வழக்கில், டிடிவி தினகரனிடம் டில்லி போலீசார் 7 மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

நேற்று காலை டில்லி சென்ற டிடிவி அங்கு டில்லி போலீசார் முன் ஆஜரானார். அவரிடம் சுமார்  சுமார் 7 மணிநேரம்  போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்கக்கோரி, சகேஷ் சந்திரா என்ற தரகர் மூலம் டிடிவி தினகரன் முயன்றதாக, கைது செய்யப்பட்ட தரகர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் டிடிவி தினகரனை டில்லி போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

தொடர்ந்து இன்றும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.