டெல்லி: டெல்லியில் 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று மட்டும் 2,312 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இது குறித்துடெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் இன்று ஒரே நாளில் மேலும் 2,312 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,77,060 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 18 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,462 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 15,870 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,56,728 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.