துபாய்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில், 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்துள்ளது டெல்லி அணி.

இப்போட்டியில், சென்னை அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. டெல்லியின் 3 விக்கெட்டுகளை மட்டுமே அந்த அணியால் கைப்பற்ற முடிந்தது.

டெல்லி அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா, 43 பந்துகளில் 64 ரன்களை அடித்தார். அந்த கணக்கில் 1 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகள் அடக்கம். ஷிகர் தவான் 27 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.

ரிஷப் பண்ட் 25 பந்துகளில் 37 ரன்களையும், ஷ்ரேயாஸ் 26 ரன்களையும் அடித்தனர்.

175 ரன்கள் என்பது எட்டமுடியாத இலக்கல்ல என்பதால், சென்னை அணி வெற்றிபெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.