ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில், 20 ஓவர்களில் 228 ரன்களை விளாசி, கொல்கத்தாவிற்கு மிகப்பெரிய இலக்க‍ை நிர்ணயித்துள்ளது டெல்லி அணி.
டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்து தவறிழைத்தது கொல்கத்தா அணி. துவக்க வீரர் பிரித்விஷா, 41 பந்துகளில் 4 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 66 ரன்களை அடித்து அவுட்டானார்.
அவர் விட்டுச்சென்ற பணியை கேப்டன் ஷ்ரேயாஸ் எடுத்துக்கொண்டார். அவர் 38 பந்துகளை சந்தித்து, 6 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிளுடன் 88 ரன்களை விளாசு விளாசென்று விளாசி தள்ளிவிட்டார்.
ரிஷப் பண்ட் தன் பங்கிற்கு 17 பந்துகளில் 38 ரன்களை அடித்தார். கூடுதலாக 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. முடிவில் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 228 ரன்களை சேர்த்தது டெல்லி அணி.
கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் போன்ற ஜுனியர் கேப்டன்களைப் பார்த்தாவது, தோனி தன்னை மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற குரல்கள் ஒலிக்கின்றன.