டெல்லி:

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள், சொந்த மாநிலங்களுக்கு திரும்பியதன் எதிரொலியாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று பரவல் தடுக்கப்பட்டிருந்த  வடமாநிலங்களளான அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

அஸ்ஸாமில் 16 பேருக்கும்,  அருணாசல பிரதேசத்திலும் முதலாவது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 31 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று நோய் உறுதியாகி உள்ளது.
அதுபோல மணிப்பூர் மாநிலத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் அனைவரும் டெல்லி டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.