துபாய்: ஐபிஎல் தொடரில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த டெக்கான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சோபிக்கவில்லை. தவான் டக் அவுட் ஆனார்.

ஷ்ரேயாஸ் 39 ரன்களையும், ரிஷப் பன்ட் 31 ரன்களையும் அடிக்க, தனி ஆளாக போராடிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் 21 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 53 ரன்களை எடுத்தார்.

பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், காட்ரெல் 2 விக்கெட்டுகளையும் க‍ைப்பற்றினர்.