வீடு இடிப்பு: கங்கனா ரனாவத் வழக்கில் உத்தவ்தாக்கரே அரசை காய்ச்சி எடுத்த மும்பை உயர்நீதிமன்றம்….
இதை எதிர்த்து, கங்கனா, மும்பை உயர்நீதி மன்றத்தில் ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து, கங்கனா வீட்டை இடிக்க நீதிமன்றம் தடை விதித்து. மாநகராட்சியின் நடவடிக்கையையும் கண்டித்தது.
இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள், , மகாராஷ்டிரா மாநில அரசு மற்றும் மும்பை மாநகராட்சியின் நடவடிக்கையாக கடுமையாக விமர்சித்ததுடன், கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்திருப்பது மாநில அரசின் தீய உள்நோக்கத்தை தவிர வேறு எதுவும் இல்லை காட்டமாக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் முப்பை மாநகராட்சி சார்பில், கங்கனா ரனாவத் விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ததுடன், கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு இழப்பீடு வழங்குவது குறித்து மதிப்பிட அதிகாரி நியமிக்கப்பட வேண்டுமெனவும், அந்த அதிகாரி அளிக்கும் அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்துஉள்ளது.
அதுபோல, சமூகவலைதளத்தில் பிறரை பற்றி கருத்து பதிவிடுகையில் கட்டுப்பாடுடன் கங்கனா நடக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் கேட்டு கொண்டது.