சென்னை:

நீட் ரத்து கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் வரும் 13 ந்தேதி தமிழகம் முழுவதும் அமைதி வழி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\

நீட் ரத்துக் கோரி எதிர்கட்சிகள் சார்பில் இன்று திருச்சியில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் அமைதி வழியில் நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து வரும் 13ம் தேதி எதிர்கட்சிகள் சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான அமைதி வழி ஆர்ப்பாட்டம் நடக்கும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.