சென்னை,

மிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏற்படும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உள்ளது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் 11 பேர் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த நிலவேம்பு கஷாயம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் ஏடிஎஸ் கொசுவை ஒழிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது. இதன் காரணமாக டெங்கு கட்டுப்படுத்தப்பட்டது என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக 11 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக அரசு மீண்டும் டெங்குவை கட்டுப்படுத்த முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.