சென்னை:

சென்னையில் டெங்கு காயச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி உள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகிளில் டெங்கு காரணமாக  சில உயிரிழப்புகள் நேர்ந்த நிலையில் தற்போது, சென்னையில் 200-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அரசு பொது மருத்துவமனையான  சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை உள்பட  அரசு மருத்துவமனைகளில்  700-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனை செய்தபோது அதில் 200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினா