சென்னை:

ணலியை சேர்ந்த 21வயது இளைஞர் ஒருவர், தான்  திருநங்கையாக மாறுவதற்கு தந்தை அனுமதி மறுத்ததால் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை  விருக்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்  பார்த்தசாரதி. 21 வயதான இளைஞர், பெண்மை தன்மை கொண்டவர். அவரது நடவடிக்கைகள் அனைத்தும் திருநங்ககை போல் அமைந்த தால், அவர் அதிகமாக வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளே இருக்க வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பார்த்தசாரதி, தான் திருநங்கையாக மாற விரும்புவதாகவும், அதற்காக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்போவதாகவும் தெரிவித்து, அதற்கு அனுமதி கொடுங்கள் என்று மன்றாடி வநதுள்ளார். ஆனால், அவரது பெற்றோர், அதற்கு அனுமதி மறுக்க சோகத்துடன் இருந்து வந்த பார்த்தசாரதி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி தலைமறை வானார்.

விசாரணையில் அவர்  மணலி பகுதியில் சில திருநங்கைகளுடன் வசித்து வருவது தெரிய வந்தது. இதையறிந்த அவரது பெற்றோர், பார்த்தசாரதியை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். இதன் காரணமாக அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், பார்த்தசாரதி மணியில் அவர் தங்கியிருந்த அறையில்,  தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.