மும்பை:
நாடு முழுவதும் இதுவரை 1.5 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 8ந்தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை நாடு முழுவதும் ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுsbi-buildingள்ளது.
 
இந்திய மிகப்பெரிய நெட்வொர்க் உள்ள வங்கியான ஸ்டேட் பாங்கில் மட்டும் இதுவரை ரூ.75,945 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும், ரூ.3,753 கோடி அளவுக்கு பழைய பணத்தைக் கொடுத்து புதிய பணமாக பொதுமக்கள் மாற்றிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் எஸ்பிஐ வங்கியில் ரூ.100 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் என ரூ.7,705 கோடி அளவுக்கு பணம் பொது மக்களால் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
black-money_pti_3803
இந்த நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதை அடுத்து, விரைவில் அனைத்து ஏடிஎம்களும் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ந்தேதி மட்டும் எஸ்.பி.ஐ.யில் 53ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.