1nata-1சிதம்பர ரகசியம்

நாம் பொதுவாக பேசும்போது, ஏதாவது முக்கியமான விசயம் சொல்ல வேண்டும்  என்றால் பக்கத்தில் இருப்பவர்  அருகில் சென்று காதில் கிசுகிசுப்பது வழக்கம். இதைத்தான் ‘ஏதோ சிதம்பர ரகசியம்’ பேசுகிறார்போல என்று பேச்சு வழக்கில் கூறப்படுவது உண்டு.
 
அதேபோல்  ‘சிதம்பர ரகசியம்’ என்றாலே சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில்தான் நினைவுக்கு வரும்.
ஆனால் நம் முன்னோர்கள் சொல்லும் சிதம்பர ரகசியம் என்ன? அவர்களால் அதை கடைபிடிக்க முடிந்ததா? முன்னோர்கள் எதை செய்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும். அதுபோலத்தான் சிதம்பரம் நடராஜர் கற்கோயிலும். அங்கு ஏதோ ரகசியம் மறைந்து இருப்பதுபோல் ஒரு மாய தோற்றம் மக்களிடையே உண்டு.
ஆனால் அங்கு உள்ள ரகசியம் என்ன என்பதை பார்ப்போம்…. அதை நிர்மாணித்த விதமும், அதில் அடங்கியுள்ள ரகசியங்களையும், எதற்காக இதுபோன்ற கோவில்களை நிர்மாணித்தார்கள் என்பதை அறிவோம்…
2nata-6
சிதம்பரம் நடராஜகோயிலின் ரகசியம் இதுதான் (சிதம்பர ரகசியம்- மனித உடல் ரகசியம்) ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய அருமையான ரகசியம்…
சிதம்பரம் நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில்  ‘ பூலோக கைலாசம்’ என்றும்  ‘கைலாயம்’  என்றும் சொல்லப்படுவது உண்டு.. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது.
 இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாகவும்,  தில்லை என்ற பெயரில் முன்னோர்களால் அழைக்கப்பட்டதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இத்தலத்தின் மூலவர் நடராஜரும்,  தாயார் உமையாம்பிகையும் ஆவர்.  இத்தலத்தின் தலவிருட்சமாக தில்லை மரமும், தீர்த்தமாக சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தங்களும் உள்ளன.
இத்தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத் தலமாகும். இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது. முன்னைக் காலங்களிலே இத்தலம் சேர, சோழ பாண்டிய, பல்லவ, விஜய நகர அரசுகளாலே புனரமைக்கப்பட்டு வந்துள்ளதோடு மட்டுமன்றி இவ்வரசுகளிடமிருந்து இத்தலத்திற்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன. சிதம்பரம் திருமூலராலும், பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது.  275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும்.
2nata-3 2nata-top
சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).
பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அதிசயத்தை நாம் பிராக்டிக்கலாக பார்க்க விரும்பினால், google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று,  பார்த்தால் மட்டுமே   இந்த அதிசயம் கண்களுக்கு புலப்படும்.  இதுபோன்ற ஒரு வானிலை தத்துவத்தை முன்னோர்கள் எப்படி கணித்திருப்பார்கள் என்றால் அதற்கு பதில் அதிசயம்தான்.
மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது. (அதாவது:  கண்கள் 2, காது 2, மூக்கு 2, வாய் 1, மலவாய் 1, ஆண்குறி 1. மொத்தம் 9 ஓட்டைகள்)
விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15x60x24 = 21,600).
இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
திருமந்திரத்தில் ” திருமூலர்” மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.
 “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன, இது 4 வேதங்களை குறிக்கின்றது.
பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் புகழப்பட்டுள்ளது.