அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், ஓசூர், அத்திமுகம், கிருஷ்ணகிரி

ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும் அவருக்கு பின்னால் காமாட்சி அம்மன் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி அகங்காரத்தை சம்ஹhரம் செய்து ஞானத்தை வழங்குகிறார். எனவே தான் இவர் சம்ஹhர தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார்.

இத்தலத்தில் இரண்டு மூலவர்கள் உள்ளனர். காமாட்சி சமேத ஐராவதேஸ்வரர் ஒரு மூலஸ்தானத்திலும், அகிலாண்டேஸ்வரி சமேத அழகேஸ்வரர் தனி மூலஸ்தானத்திலும் அருள்பாலிக்கிறார்கள்.

மூலையில் மிகப்பெரிய பழமையான பாம்புப் புற்று ஒன்று உள்ளது. ஆரம்பக்காலத்தில் மணலால் ஆன இந்த புற்று காலப்போக்கில் இறுகி பாறையாக மாறியதிலிருந்தே இந்த புற்றின் பழமையைத் தெரிந்து கொள்ளலாம்.

நந்தி விலகிய தலம் :

இது ஒரு சூரிய பூஜைக்கோயில். தை மாதம் முதல் வாரத்தில் சூரியனின் கதிர்கள் இறைவனின் மீது பட்டு பூஜை நடக்கிறது. அப்போது சிவனின் முன்பாக எந்த இடையூறும் இல்லாமல் இருக்க நந்தி விலகி சூரிய பூஜை சிறப்பாக நடக்க வழி செய்துள்ளது. சூரிய பூஜைக்காக நந்தியே விலகியிருப்பதால் நவக்கிரகங்களும் அமைதியாக அமர்ந்த நிலையில் உள்ளன. இது இக்கோயிலின் ஒரு சிறப்பான அம்சமாகும்.

சிவலிங்கத்தின் மீது உருவங்கள் பொறிக்கப்படுவது மிக அபூர்வம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் நாகேஸ்வரர் சிலையில் பாம்பு உருவம் இருக்கும். அதுபோல கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் யானை உருவத்தைக் கொண்ட லிங்கத்தைத் தரிசிக்கலாம்.

சிறப்பம்சங்கள் :

ஒரே கோயிலில் இரண்டு மூலவர்கள் உள்ளனர்.

சூரிய பூஜைக்காக நந்தி விலகியிருக்கும் தலம் இது.

தை மாதம் முதல் வாரத்தில் சூரியனின் கதிர்கள் இறைவனின் மீது விழுகிறது.

ஐராவத யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது.