பெங்களூரு:

முன்னாள் பிரதமர் தேவேகவுடா துமாகுறு மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என அனிதா குமாரசாமி தெரிவித்துள்ளார்.


சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் தேவேகவுடா, எனக்கு 87 வயதாகப் போகிறது. எனவே தேர்தலில் நிற்பது குறித்து யோசிக்கின்றேன் என்றார்.

அதன்பின்னர், தேர்தலில் போட்டியிடுவது குறித்து தோழமை கட்சிகளுடன் ஆலோசித்து வருவதாக தேவேகவுடா தெரிவித்தார். வடக்கு பெங்களூருவில் போட்டியிடுவதா அல்லது துமாகுறுவில் போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே அனிதா குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவேகவுடா துமாகுறு தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மறைந்த காங்கிரஸ் எம்பி அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா, தேவேகவுடா போட்டியிட்ட மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

செல்வாக்குள்ள ஹசன் தொகுதியை பேரன் ப்ரஜ்வால் ரெவன்னாவுக்கும், மாண்டியா தொகுதியை மற்றொரு பேரன் நிகில் கவுடாவுக்கும் தேவேகவுடா ஒதுக்கியுள்ளார்.