சென்னை:

ண்டபம் அகதிகள் முகாம் டிஜிபி அசுதோஷ் சுக்லா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி அறிவித்து உள்ளார்.

1986-ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான அசுதோஷ்சுக்லா சில மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று சிறைத்துறை டிஜிபியாக  பணியாற்றினார். நாடாளுமன்ற தேர்தலின்போது, அவரை தேர்தல் டிஜிபியாகதேர்தல் ஆணையம் நியமனம் செய்தது. தேர்தலுக்கு பிறகு, அவர் மண்டபம் முகாம் அகதிகள் முகாமுக்கு மாற்றப் பட்டார்.

இந்நிலையில் இன்று அசுதோஷ் சுக்லாவை ராமநாதபுரம் அகதிகள் முகாமிலிருந்து சென்னை போக்குவரத்துக் கழக விஜிலென்ஸ் டிஜிபியாக மாற்றி உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே சென்னை காவல் ஆணையர், அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.