dhanush-aishwarya-at-prince-jewellery-46
‘கபாலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கவுள்ள புதிய படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளார். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என இதற்கு தலைப்பு சூட்டியுள்ளனர்.
இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ஹீரோவாக மோகன்லாலின் மகன் பிரணவ்வை அல்லது நாகார்ஜுனாவின் மகன் அகிலை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்தது. ஆனால், இதுபற்றி சூப்பர் ஸ்டாரிடம் சொல்ல, அவரோ தனுஷ் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருப்பார் என கூறியிருக்கிறார். இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக ‘கபாலி’யின் 100-வது நாள் விழாவில் அறிவிப்பார்களாம்.