புத்தாண்டுக் கொண்டாட்டம், மனைவியின் பிறந்த நாள் கொண்டாட்டம் எனக் குடும்பத்தினருடன் தனுஷ் கழித்த பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் செல்வராகவன் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

தனுஷ் படத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறித்து செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில், “எனது உலகிற்கு வந்துவிட்டேன். எனது 12-வது படம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், யுவன் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளனர். தாணு தயாரிக்கவுள்ளார்.