டிகர் தனுஷ் 2 வருடத்துக்கு முன்பு பா.பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதன் இரண்டாம் பாகம் இயக்க இந்த ஆண்டு தொடக்கத்தில் திட்டமிட்டார். பின்னர் அப்படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப் பட்டது. ஆனால் தனுஷ் வேறு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் அவர் இயக்கும் படத்தை தள்ளி வைத்திருக்கிறார்.

அசுரன் படம் முடிந்த பிறகு மீண்டும் தான் இயக்கும் படத்தை தொடர்வார் என்று கூறப்பட்டது.
அதன்படி தற்போது தான் இயக்கும் படத்தை கையிலெடுத்திருக்கிறார் தனுஷ். அப்படத் துக்கு ’நான் ருத்ரன்’எனப் பெயரிடப்பட் டுள்ளது.இருமொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தில் நாகார்ஜூனா, அதிதி ராவ் ஹைத்ரி நடிக்கின் றனர். பிரதான வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.