தருமபுரி:

ருமபுரி மாவட்டத்தில் கடந்த  சில நாட்களாக புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவாத நிலையில், கொரோனா இல்லாத மாவட்டமாக தருமபுரி மீண்டும் மாறி உள்ளதாக ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக  அறிவித்து உள்ளார்.

தருமபுரி ஆட்சித்தலைவர் மலர்விழி

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மலர்விழி,  மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்  தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலோடு  மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மாவட்டத்தில் 5 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று சிகிச்சை முடிந்து நல்ல முறையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் யாரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களிலிருந்து, தருமபுரி மாவட்டத்திற்கு 2,750 நபர்கள் வருகை தந்துள்ளனர். அப்படி வந்தவர்கள் அனைவரும், செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்,  ஒருவருக்குக்கூட கரோனா தொற்று இல்லை, அவர்கள்  சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தங்களது வீடுகலேயே  14 நாள்களுக்கு அவர்களை தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் நடவடிக்கையால் தருமபுரி மாவட்டம் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.