திருப்பதி:

திருப்பதியில் நன்கொடையாளர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்குபவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

தரிசனத்திற்கு பல மணி நேரம் பக்தர்கள் காத்து நிற்கின்றனர். கோடை விடுமுறை முடியும் வரை வார இறுதி நாட்களில் நன்கொடையாளர்களுக்கு அனுமதிக்கப்படும் தரிசனத்தை ரத்து செய்யப்பட்டுளளது. அதேபோல் விஐபி பரிந்துரை கடித தரிசனம், வி.ஐ.பி. பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.