பாட்டியாலா:

பஞ்சாபின் பாட்டியாலா நகரத்தில் 22வது 22 பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வீரர் தருண் அய்யாசாமி  400 மீட்டர் தடை ஓட்டத்தில்  புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார்.

இன்று நடைபெற்ற கடைசி நாள் போட்டியில்,  ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் கலந்துகொண்ட  தமிழக வீரர் தருண் அய்யாசாமி 49.45 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

இதன் காரணமாக அவர் அடுத்த  மாதம் நடைபெற உள்ள  காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஏற்கனவே கேரளாவை சேர்ந்த ஜோசப் ஆபிரகாம் 2007ம் ஆண்டு நடைபெற் றபோட்டியின்போது, 49.94 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தை சேர்ந்த தருண்,  49.45 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி, பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் தமிழக வீரர்கள் சந்தோஷ்குமார் 50.14 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், ராமச்சந்திரன் 51.61 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளனர்.