ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் 2016-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘தில்லுக்கு துட்டு’.தொடர்ந்து, ‘தில்லுக்கு துட்டு 2’ படம் தயாரானது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

18 ரீல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செளத்ரி இதன் தொடர்ச்சியாக மூன்றை எடுக்க திட்டமிட்டுள்ளனர். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டகால்டி’ படத்தையும், இவர் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லுக்கு துட்டு 3’ படத்தை 3டி-யில் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.