புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது ஓய்வை அறிவித்துள்ளதையடுத்து, எனக்கு’ எப்போதுமே அவர்தான் கேப்டன்’ என்று உருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்நாள் கேப்டன் விராத் கோலி.

அவர் கூறியுள்ளதாவது, “வாழ்க்கையில் பலமுறை வார்த்தைகள் குறைவதை அந்தந்த தருணங்களில் ஒன்றாக நினைக்கிறேன். நாங்கள் இருவரும், சிறந்த நட்புணர்வு மற்றும் புரிந்துணர்வைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.

ஏனெனில், எப்போதுமே ஒரே இலக்கை நோக்கியே விளையாடியுள்ளோம். அந்த எண்ணம்தான் அணியின் வெற்றிக்கு உதவியுள்ளது. உங்கள் தலைமையின்கீழ் விளையாடியதை எப்போதுமே மறக்க முடியாது.

அந்த காலங்களில் என்மீது அதிக நம்பிக்கை வைத்தீர்கள். அதற்காக, நான் எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன். நான் முன்னரே சொன்னதுபோல், நீங்கள்தான் எனக்கு எப்போதுமே கேப்டனாக இருப்பீர்கள்” என்றுள்ளார் கோலி.