செஸ் விளையாட்டு வீரராக இருந்து, இந்திய அணியின் முக்கியப் பந்து வீச்சாளராக உயர்ந்துள்ள ஹரியானா சுழற்பந்து வீச்சாளர் யஸ்வேந்திர சஹால், தனது முதிர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் மகேந்திர சிங் தோனிதான் முக்கிய காரணம் என கூறியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு, இவர் முதன்முதலாக சர்வதேச கிரிகெட்டில் ஆடத் தொடங்கினார். தற்போது, ஒருநாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத சுழல் பந்துவீச்சாளராக உருவாகியுள்ளார்.

கடிமான மற்றும் நெருக்கடியாக சூழல்களில் இவர் மனக்கட்டுப்பாட்டுடன் செயல்படுவது முக்கிய அம்சமாக குறிப்பிடப்படுகிறது.

தனது செஸ் விளையாட்டுப் பயிற்சி, தனது மனதை அமைதியாகவும் கட்டுப்பாடாகவும் வைத்துக்கொள்ள உதவுவதாக தெரிவித்துள்ள இவர், தனக்கும், குல்தீப் யாதவிற்கும் தோனியின் ஆலோசனைகள் மிகவும் உதவியுள்ளதாக கூறுகிறார்.

“தோனியின் அனைத்து ஆலோசனைகளையும் நாங்கள் மதிப்போம். நாங்கள் புதிதாக எந்த முடிவை மேற்கொண்டாலும், அதுகுறித்து தோனியிடம் தெரிவித்து கலந்துரையாடவே விரும்புவோம்” என்று புகழ்ந்துள்ளார்.