மும்பை: முன்னாள் பந்துவீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ராவைப் போல், கால இடைவெளி கழித்தும்கூட, இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் மகேந்திர சிங் தோனி களமிறங்க வாய்ப்புள்ளது என்றுள்ளார் இந்தியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோரே.

அவர் கூறியுள்ளதாவது, “தோனியின் மனம் ஆடுவதற்கு விரும்பலாம்; அதேசமயம் அவரின் உடல் வேண்டாம் எனலாம். சமீபத்தல் சென்னையில் நடந்த ஐபிஎல் பயிற்சியின்போது அவர் முழு உடற்தகுதியுடன் இருந்தார்.

டென்னிஸ் போட்டிகளைப் பொறுத்தவரை 39 வயதில்கூட சிறப்பாக ஆடுகின்றனர். எனவே, உடற்தகுதி சிறப்பாக இருந்தால் வயது ஒரு பிரச்சினையல்ல. கடந்த 2011ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக ஆடிய ஆஷிஸ் நெஹ்ரா, பின்னர் திடீரென தனது ஆட்டத்தை நிறுத்தினார்.

ஆனால், 5 ஆண்டுகள் கழித்து 2016ம் ஆண்டு அவர், சர்வதேச டி-20 போட்டிகளில் அவர் மீண்டும் பங்கேற்றார். எனவே, தோனியின் விஷயத்திலும் அவ்வாறு நடக்கலாம். அதேசமயத்தில், தோனி தனது ஓய்வையும் அறிவிக்கலாம். எப்படியிருந்தாலும், அவரின் முடிவிற்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றார்.