சென்னை: பெரியார் குறித்த பாஜக தலைவரின் பேச்சை அதிமுக கண்டிக்காதது ஏன்?, பெரியாருக்கு பதிலாக மோடியை ஆசானாக இபிஎஸ், ஓபிஎஸ் கட்சி ஏற்றுக்கொண்டதா? ப.சிதம்பரம் டிவிட்…  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான  ப.சிதம்பரம் தமது டிவிட்டர் பக்கத்தில்,

தான் திராவிடக் கட்சி என கூறிக் கொள்ளும் அதிமுக, பெரியார் குறித்த பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை. தந்தை  பெரியாருக்கு பதிலாக பிரதமர் மோடியை ஆசானாகவும், வழிகாட்டியாக இபிஎஸ், ஓபிஎஸ் கட்சி ஏற்றுக்கொண்டுவிட்டதா?

தமிழ் நாகரிகத்தையும், தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் பெரியார்,  காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்தவர்கள் பெரியார், காமராஜர், அண்ணா

தமிழ்நாட்டில் பெரியாரிசம் (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே  பாஜக இங்கு வந்திருக்கிறது என்று பாஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன், சனாதன தர்மம் என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்து போராடி வென்றவர் பெரியார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.