12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர் – பகுதி 3

விக்கினம் தீர்ப்பவர் எனபதால் விக்னேஸ்வரர் என வணங்கப்படும் விநாயகர் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு  பலனை அளிப்பார்.  அதற்கேற்றபடி பக்தர்கள் வணங்க வேண்டிய கணபதியும் மாறுவார்.  என பதிவில் எந்த ராசிக்காரர்கள் எந்த கணபதியை வணங்க வேண்டும் என காண்போம்

ஏற்கனவே 6 ராசிகளுக்கான கணபதியை கண்டோம்.  இன்றைய பகுதியில் அடுத்த 3 ராசிகளை  இப்போது காண்போம்

 

துலாம்: அயராத உழைப்பினை உடைய நீங்கள் கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓய மாட்டீர்கள். ஒரு லட்சியத்தில் வெற்றி பெற்றாலும் ஓய்ந்துவிடாது அடுத்த லட்சியத்தை நாடிச் செல்பவர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.

 

விருச்சிகம்: இயற்கையில் மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காது சதா பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் நினைத்த மாத்திரத்தில் காரியத்தைச் செய்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டவர்கள். சதா பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் நர்த்தன கணபதி.

 

தனுசு: குரு பகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் நேர்மையை மிகவும் நேசிப்பவர்கள். நேர் வழியைத் தவிரக் குறுக்குவழியில் செல்ல விருப்பமில்லாதவர்கள். தர்ம நெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தைச் சந்தித்து வரும் உங்களுக்கு சங்கடஹர கணபதியே வழிபாட்டிற்கு உகந்தவர்.