12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர் – பகுதி 4

விக்கினம் தீர்ப்பவர் எனபதால் விக்னேஸ்வரர் என வணங்கப்படும் விநாயகர் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு  பலனை அளிப்பார்.  அதற்கேற்றபடி பக்தர்கள் வணங்க வேண்டிய கணபதியும் மாறுவார்.  என பதிவில் எந்த ராசிக்காரர்கள் எந்த கணபதியை வணங்க வேண்டும் என காண்போம்

ஏற்கனவே 9 ராசிகளுக்கான கணபதியை கண்டோம்.  இன்றைய இறுதிப் பகுதியில் மீதமுள்ள 3 ராசிகளை  இப்போது காண்போம்

 

மகரம்: சனி பகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் தியாக உள்ளம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையினால் ஒரு சில விஷயங்களில் இழப்பினை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி மனக் குழப்பத்திற்கு ஆளாகும் நீங்கள் மனதினை அடக்கி ஆளக் கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி.

 

கும்பம்: அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கி ஆள நினைப்பவர்கள். தான் அறிந்திராத விஷயத்தையும் கூட தனக்குத் தெரியாது என்பதை வெளிக் காண்பிக்காது செயல்பட்டு வருவீர்கள். அதே நேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துபவர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு தனித்திறமை மூலம் முன்னேறி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.

மீனம்: இயற்கையிலேயே கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையவர்கள். அடுத்தவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாது எல்லோரும் நல்லவரே என்ற எண்ணத்துடன் பழகி வருவீர்கள். சூது, வாது தெரியாத நீங்கள் தான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தினை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.