திருவனந்தபுரம்

துபாய் செல்ல நடிகர் திலிப்புக்கு கேரளா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.  சுமார் 90 நாட்கள் சிறையில் இருந்த திலீப் ஜாமினில் வெளி வந்தார்.  அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவருடைய பாஸ்போர்ட்டை அங்கமாலி நீதிமன்றம் பறிமுதல் செய்தது.

துபாயில் இம்மாத இறுதியில் திலீப்புக்கு சொந்தமான ஓட்டல் திறக்கப்பட உள்ளது.  அந்த திறப்பு விழாவுக்காக துபாய் செல்ல திலிப் கேரள உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்தார்.  இந்த மனுவை விசாரித்த பின் கேரளா உயர் நீதிமன்றம் நான்கு நாட்கள் வெளிநாடு செல்ல திலிப்புக்கு அனுமதி அளித்துள்ளது.  அத்துடன் அங்கமாலி நீதிமன்றத்துக்கு ஆறு நாட்களுக்கு மட்டும் திலீப்பின் பாஸ்போர்ட்டை அளிக்க உத்தரவிட்டுள்ளது