ரவுண்ட்ஸ்பாய்:
download-3சென்னை இளம்பெண் சுவாதி கொலை வழக்குல, ராம்குமார் குற்றவாளி அல்ல அப்படின்னும், சுவாதி மதம் மாறி இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்துகொள்ள இருந்ததால ஆணவக்கொலை செய்யப்பட்டார் அப்படின்னும்  முகநூலில் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி வர்றவங்க, தமிழச்சி என்பவரும், திலீபன் மகேந்திரன் என்பவரும்.
திலீபன் மகேந்திரன், தேசியக்கொடியை எரித்து அந்த காட்சியை முகநூலில் பதிவிட்டு பரபரப்பைக் கிளப்பினாரே, அவருதான்.
இரட்டைக் குழல் துப்பாக்கி போல(!) செயல்பட்டு வந்த ரெண்டு பேரும் இப்போ எதிரும் புதிருமாக ஆகியிருக்காங்க.
“இரு குழந்தைகளுக்கு தாயானவருடன் நெருங்கிப் பழகி, அவரையும் தவிக்கவிட்டு ஓடினார் திலீபன் மகேந்திரன்.  காதல் என்ற பெயரில் நிறைய பெண்களை அவர் ஏமாற்றியிருக்கிறார்”அப்படின்னு  தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில பதிவிட்டிருக்காரு.
அந்த பதிவு:
“காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதற்காக அப்பெண்ணிற்கு மறைவான இடத்தில் எங்கெங்கு மச்சங்கள் உள்ளன என்று பட்டியலிட்டு, இராத்திரி 10 மணிக்கு மேல வாடின்னா ஓடியாந்துருவா. இவ எப்படி புதுமாப்பிள்ளையோட வாழ்ந்துடறான்னு பார்த்துடறேன்” என்று ஒன்றரை வருடங்களுக்கு முன் பேஸ்புக்கில் ஒரு மனித மிருகம் எழுதியது.
பேஸ்புக்கில் சாகசக்காரனாக போராளியாக பில்டப் கொடுத்து தனது நட்பு வட்டத்தில் இருக்கும் பெண்களிடம் சாட் செய்து காமலீலைகள் நடத்தும் அதே மனித மிருகத்திடம் சிக்கிய இன்னொரு பெண் 2 குழந்தைகளுக்கு தாய்.

திலீபன் மகேந்திரன் - தமிழச்சி
திலீபன் மகேந்திரன் – தமிழச்சி

“கணவனை விட்டுவிட்டு வந்துவிடு. நான் வாழ்க்கை கொடுக்கிறேன்” என்று பேசியதை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்த அந்த பெண்ணிடம் சில காலம் இருந்துவிட்டு சென்னையில் குழந்தைகளோடு தவிக்க விட்டு ஓடிப் போனது அந்த இரண்டு கால் மனித மிருகம். இதில் அந்தப் பெண்ணிற்கு அடிக்கடி அடி . வேறு எந்த ஆணிடம் பேசினாலும் சந்தேகம் வேறு.
இந்த மிருகம் எதற்காக ஓடியது என்றால், கோவையில் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு.
அந்த மிருகம் தேசிய கொடியை எரித்தது என்பதற்காகத்தான் த.பெ.தி.க வில் இருந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொது ஒழுக்கமற்ற அந்த மனித மிருகத்தை பெரியார் இயக்கத்தில் வைத்திருப்பது இயக்கத்திற்கு அவப்பெயர் என்றே துரத்தப்பட்டது. அதற்கு பிறகாவது திருந்தியதா?
1
திரும்பவும் சாட்டில் மாட்டியது ஒரு லண்டன் பெண். அந்த நேரத்தில் தான் சுவாதி படுகொலை தொடர்பான விவாதங்கள் நடந்துக் கொண்டிருந்தது. பேஸ்புக்கில் போராளியாகவும் சாட்டுக்குள் வேறு சில பெண்களிடம் வேறு மாதிரியாகவும் பழக ஆரம்பித்தது. ஓடிவந்த பெண் என்னை ஏமாற்றி விட்டாயே என்று கதறியது. லண்டன் பெண்ணைத்தான் காதலிக்கிறேன். நீ எனக்கு அம்மா மாதிரி என்றது அந்த மிருகம்.
ஒருபுறம் போராளியாகவும் மறுபுறம் புள்ளிராஜாவாகவும் சுற்றிக் கொண்டிருந்த அந்த மனித மிருகம் சிறைக்குள் அடைக்கப்பட்டது. அந்த சில நாட்களில் காதலிகளில் ஒருவருக்கு உண்மை தெரியவே தற்கொலைக்கு அந்த காதலி முயன்றுள்ளார்.
அந்த மிருகம் சிறைக்கு செல்ல இருந்த 3 வாரங்களுக்கு முன் என் தொடர்பிற்கு வந்து சில உதவிகள் கேட்டது. அந்த மனித மிருகம் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. போலிசிடம் அந்த மனித மிருகம் மாட்டப்படும் போது அத்தகவலை என்னிடம் சொல்லச் சொல்லியது.
2
போலிசில் பிடிபட்ட ஒரு மணி நேரத்திற்குள் தகவல் வர உடனடியாக அவனை மீட்கும் முயற்சிக்கு ஏற்பாடு செய்தேன். அப்போதுதான் அந்த மனித மிருகம் குறித்த தகவல்களை தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். அந்த மிருகம் மீது விமர்சனங்கள் இருப்பினும் அரச பயங்கரவாதத்திற்காக அவனை ஆதரிக்க வேண்டும். அவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு சிறையில் இருந்து பாதுகாப்பான இடத்தில் தங்கும் வரை பாதுகாப்பு அளித்தனர்.
அந்த மனித மிருகத்தால் பாதிக்கப்பட்ட 3 பெண்களிடம் தகவல்களை கேட்டறிந்தேன். அனைத்தும் உண்மை என்றார்கள். அம்மா மாதிரி என்று சொன்ன பெண்ணே தங்களுக்குள் நடந்த கதையை தெளிவாக கூறிவிட்டார்.
சிறைக்குள் இருந்து வெளிவந்த மறுநாளில் என்னுடன் அந்த மிருகம் தொடர்புக்கு வந்த போது கடுமையாக கண்டித்தேன். அடுத்த முறை எந்த பெண்ணிடமாவது இந்த மாதிரி வேலையை ஆரம்பித்தால் ‘குஞ்சை அறுத்து கையில் கொடுத்து விடுவேன்’ என்று திட்டிவிட்டு சாட் பக்கத்தில் இருந்து தடை செய்தேன்.
3
இதற்கு பிறகே அந்த மிருகம் என்னை குறித்து குழுவிற்குள் கண்டபடி பேச ஆரம்பித்தது. அத்தகவல் அப்போதே தெரிந்த போதும் “பன்றிகளுக்கு தத்துவம் போதிப்பது பன்றிகளுடன் சேர்ந்து நாமும் புரளுவதற்கு சமம்” என்று புறக்கணித்திருந்தேன்.
எனது புறக்கணிப்பை முட்டாள் வேறு வித கணிப்புக்குள் கொண்டு சென்றது. ‘அவ’, ‘இவ’, ‘கிழவி’, ‘பொம்பள’ என்று இழித்து பேசி புரட்டுக் கதைகளை தொடர்ந்து “மலத்தை தின்று கக்கி வைத்தது போல் புரளிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது அந்த மனித மிருகம்.
இதற்கு மேல் இந்த மிருகத்தை இழிவு படுத்துவதற்கு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத தேவையில்லை. ஆனால் இந்த மிருகத்திற்கு பணத்தை அள்ளிக் கொடுத்து ஏமாந்த நபர்கள் பின்னூட்டங்களில் தகவல்களை கேட்கலாம். [எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது என்பதற்கான தகவல்களையும் பதிவிடவும்]
என் மீதான முரண்பாட்டை முன்வைக்கலாம்.
உண்மைகளை அறியத்தரும் கடமை எனக்கிருக்கிறது…”இதான் தமிழச்சியோட பதிவு.
பதிலுக்கு தமிழச்சிய திட்டி திலீபன் மகேந்திரன் பதிவு போட்டிருக்காரு. அத அடுத்து பார்ப்போம்.
இதெல்லாம் ஒரு செய்தியானு கேக்குறீங்களா.. இதையெல்லாம் செய்தியா பார்க்கிற நிலையிலதான பெரும்பாலான பேரு இருக்கிறோம்.. ஹூம்!